sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

வாலிபர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: திருமால்பூரில் கொடூரம்

/

வாலிபர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: திருமால்பூரில் கொடூரம்

வாலிபர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: திருமால்பூரில் கொடூரம்

வாலிபர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: திருமால்பூரில் கொடூரம்


ADDED : ஜன 17, 2025 09:35 PM

Google News

ADDED : ஜன 17, 2025 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெமிலி:ராணிப்பேட்டை மாவட்டம், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சூர்யா, 24. விஜயகணபதி, 22. இவர்கள் நண்பர்களுடன் நேற்று முன்தினம், திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திருமால்பூர் காலனி கிராமத்தைச் சேர்ந்த பிரேம், 22, உள்ளிட்ட சிலர், சூர்யா, விஜயகணபதி ஆகியோரை தாக்கி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பி சென்றனர். அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், தெருவில் பிரேம் உள்ளிட்ட சிலர், பைக்கில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்ட விவகாரத்தில், முன்விரோதம் காரணமாக, அடுத்த நாள் பிரேம் கூட்டாளிகளுடன் சேர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்த நிலையில், கொடூர சம்பவத்தில் ஈடுபட்டோரை கைது செய்ய வேண்டும் என, நேற்று முன்தினம் இரவு உறவினர்கள் திருமால்பூர் - பனப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த நெமிலி போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், திருமால்பூர் காலனி பகுதியைச் சேர்ந்த பிரேம், 22, என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரது கூட்டாளிகள் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து, நெமிலி பகுதியில் நெல்வாய் கிராமத்தினர், நேற்று மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.

நெமிலி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். பதற்றம் காரணமாக, நெல்வாய் மற்றும் திருமால்பூர் கிராமத்தில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us