sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெரியார் பல்கலையில் 'பசுமை வனம்' மாவட்ட வன அலுவலர் துவக்கி வைப்பு

/

பெரியார் பல்கலையில் 'பசுமை வனம்' மாவட்ட வன அலுவலர் துவக்கி வைப்பு

பெரியார் பல்கலையில் 'பசுமை வனம்' மாவட்ட வன அலுவலர் துவக்கி வைப்பு

பெரியார் பல்கலையில் 'பசுமை வனம்' மாவட்ட வன அலுவலர் துவக்கி வைப்பு


ADDED : ஜூலை 23, 2025 02:30 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், சேலம் பெரியார் பல்கலை, மாவட்ட வனத்துறை இணைந்து, பல்கலை வளாகத்தில், 4.5 ஏக்கரில், 500 மரக்கன்றுகளை நட்டு, 'பெரியார் பசுமை வனம்' உருவாக்கும் பணி நேற்று நடந்தது.

பல்கலை நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்ரமணி, ஜெயந்தி தலைமை வகித்தனர். மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலக பணியாளர்கள், தொழிலாளர்கள், ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டனர். பல்கலை பதிவாளர்(பொ) ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, காஷ்யப் சஷாங்க் ரவி அளித்த பேட்டி: இந்த முயற்சி, 10 ஆண்டுக்கு பின், தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர், இப்பகுதியை காணும்போது இயற்கை சூழ்ந்த பகுதியாக காணப்படும். இதேபோல் பல்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.நகர்புற பகுதிகளில் பசுமை வனம் போன்ற மரக்கன்றுகளை நட, வனத்துறை உரிய உதவிகளை மேற்கொள்ளும். இதன்மூலம் நகர்பகுதியில் வெப்பமாதல் ஓரளவு குறையக்கூடிய சூழல் ஏற்படும். கடந்த ஓராண்டில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், வனத்துறை சார்பில் நடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us