sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'ஸ்கேன்' மையத்தில் கரு பாலினம் அறிவிப்புஅரசு மருத்துவர், 8 செவிலியர் 'சஸ்பெண்ட்'

/

'ஸ்கேன்' மையத்தில் கரு பாலினம் அறிவிப்புஅரசு மருத்துவர், 8 செவிலியர் 'சஸ்பெண்ட்'

'ஸ்கேன்' மையத்தில் கரு பாலினம் அறிவிப்புஅரசு மருத்துவர், 8 செவிலியர் 'சஸ்பெண்ட்'

'ஸ்கேன்' மையத்தில் கரு பாலினம் அறிவிப்புஅரசு மருத்துவர், 8 செவிலியர் 'சஸ்பெண்ட்'


ADDED : மார் 01, 2025 01:43 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஸ்கேன்' மையத்தில் கரு பாலினம் அறிவிப்புஅரசு மருத்துவர், 8 செவிலியர் 'சஸ்பெண்ட்'

சேலம்:'ஸ்கேன்' மையம் நடத்தி, கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறிய விவகாரத்தில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், 8 செவிலியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

சேலம், வீராணத்தில் உள்ள 'பசுபதி ஸ்கேன்' மையத்தில், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக, சுகாதார துறை அலுவலர்களுக்கு புகார் வந்தது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் ஏராளமானோர், இங்கு வந்து பரிசோதித்து செல்வது தெரிந்தது. இதனால் கடந்த, 25ல், கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில், அது உறுதி செய்யப்

பட்டது.அந்த மையத்தை, ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய, தற்காலிக செவிலியர் கலைமணி நடத்தியதும் தெரிந்தது. இவர்கள் பாலினத்தை கண்டறிந்து கூற, கர்ப்பிணியரிடம், 15,000 ரூபாய் வரை கட்டணம் வசூலித்ததும் தெரிந்தது. இதனால் மையத்துக்கு, 'சீல்' வைத்த அதிகாரிகள், அங்கிருந்த கருவிகள், ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வீராணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து

விசாரிக்கின்றனர். முத்தமிழ், கலைமணி மட்டுமின்றி அவர்களுக்கு உடந்தையாக இருந்த கிராம சுகாதார செவிலியர் அம்பிகா ஆகியோர், இரு நாட்களுக்கு

முன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். மேலும் கலைமணியை, 'டிஸ்மிஸ்' செய்ய, உயர் அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ இணை இயக்குனர்கள் மீனாட்சி சுந்தரி, நந்தினி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் சவுண்டம்மாள், யோகானந்த், மாநகர நல அலுவலர் முரளிசங்கர் அடங்கிய குழுவினர்

விசாரித்தனர். அதில் மையத்துக்கு உடந்தையாக செயல்பட்ட, சேலம் மற்றும் ஆத்துாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்

களாக பணிபுரிந்த வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலைச்செல்வி, மகேஸ்வரி ஆகியோரையும், 'சஸ்பெண்ட்' செய்து சுகாதார

அலுவலர்கள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us