sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இலவச திட்டங்களை இரட்டிப்பாக பெறபுதிய ரேஷன் கார்டு கேட்போர் அதிகரிப்பு

/

இலவச திட்டங்களை இரட்டிப்பாக பெறபுதிய ரேஷன் கார்டு கேட்போர் அதிகரிப்பு

இலவச திட்டங்களை இரட்டிப்பாக பெறபுதிய ரேஷன் கார்டு கேட்போர் அதிகரிப்பு

இலவச திட்டங்களை இரட்டிப்பாக பெறபுதிய ரேஷன் கார்டு கேட்போர் அதிகரிப்பு


ADDED : ஜூலை 17, 2011 01:25 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழகத்தில் சட்டசபை தேர்தலின் போது, பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், இலவச திட்டங்களை அறிவித்தன. புதியதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, இலவச ஆடு, மாடு, கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், மாதம், 1,000 ரூபாய் முதியோர் உதவி தொகை, 20 கிலோ ரேஷன் அரிசி இலவசம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது.தமிழகத்தில், 1.5 கோடி ரேஷன் கார்டுதாரர்கள், அரசின் இலவச திட்டங்களை பெற காத்திருக்கின்றனர். அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவசங்களை வழங்க, மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால், இலவசங்களை பெற, பொதுமக்கள் மிகுதியான ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், பெற்றோருக்கு தனியாகவும், திருமணமானவர்களுக்கு தனியாகவும், ரேஷன் கார்டு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முதியவர்கள், ஆதரவற்றோர் உதவித்தொகை பெறவும் வாய்ப்பாக அமையும். அதனால், புதியதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.செப்., 15ம் தேதி, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளில், முதல்கட்டமாக, 25 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசங்களை வழங்க தேவையான நடவடிக்கையை தமிழக முதல்வர் எடுத்துள்ளார். ஐந்தாண்டுகளில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கைபடி, இலவச திட்டங்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், ஐந்து ஆண்டு முடிவில், தற்போது உள்ள ரேஷன் கார்டுகள் இரட்டிபாக வாய்ப்பு உள்ளது. புதிய ரேஷன் கார்டு தாரர்களுக்கும் இலவச திட்டங்களை வழங்கினால், மாநில அரசுக்கு நிதி நெருக்கடி உருவாகும்.






      Dinamalar
      Follow us