/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உறவினர் வீட்டில் நகைதிருடிய பெண் கைது
/
உறவினர் வீட்டில் நகைதிருடிய பெண் கைது
ADDED : ஜன 05, 2025 01:55 AM
உறவினர் வீட்டில் நகைதிருடிய பெண் கைது
சேந்தமங்கலம்,:சேந்தமங்கலம் அருகே, ஆர்.பி., புதுாரை சேர்ந்தவர் துாயவன், 44; இவரது மனைவி திவ்யா. இவர், நேற்று முன்தினம் காலை, வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். பின், தோட்டத்தில் வேலை செய்யும் ஆட்களுக்கு டீ வைத்துக்கொண்டு செல்வதற்காக, மதியம், 2:00 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் சாவி வேறு இடத்தில் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அவர், வீட்டில் உள்ள நகைகளை சரிபார்த்துள்ளார். அப்போது, 4 பவுன் தங்கநகை, கொலுசு, 4,000 ரூபாய் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து, திவ்யா சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தார். புகார்படி, வீட்டின் அருகே இருந்த ஓட்டலில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர். அதில், துாயவனின் அத்தை மருமகள் சுதா வந்து சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், துாயவன் வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்.

