sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தை அமாவாசையில் முன்னோர்க்கு தர்ப்பணம்

/

தை அமாவாசையில் முன்னோர்க்கு தர்ப்பணம்

தை அமாவாசையில் முன்னோர்க்கு தர்ப்பணம்

தை அமாவாசையில் முன்னோர்க்கு தர்ப்பணம்


ADDED : ஜன 30, 2025 01:11 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தை அமாவாசையில் முன்னோர்க்கு தர்ப்பணம்

மேட்டூர்,:சூரியன், சந்திரன், பூமி ஆகியவை, நேர்கோட்டில் இணையும் அமாவாசையில், தங்கள் சந்ததியினரை பார்க்க, முன்னோர் பூமிக்கு திரும்புவதாக நம்பிக்கை உள்ளது.

அதிலும் உத்தராயணம் தொடங்கும் தை அமாவாசையின், முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் தை அமாவாசையான நேற்று, மேட்டூர் காவிரி பாலம் அருகே, காவிரி கரையோர படித்துறையில், திரளானோர் அமர்ந்து, புரோகிதர்கள் மூலம், முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்தனர். பின் காவிரியில் நீராடி முன்னோர்களை வணங்கினர்.

அதேபோல் பூலாம்பட்டி, கல்வடங்கம், கோனேரிப்பட்டி, காவேரிப்பட்டி உள்ளிட்ட காவிரி கரையோரங்களில் ஏராளமான மக்கள், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனம், மூக்கனேரி, குமரகிரி ஏரி, கன்னங்குறிச்சி புது ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளிலும் ஏராளமானோர், முன்னோர் வழிபாடு நடத்தினர். இதில் புரோகிதர்கள் வழிநடத்த, பிண்டம் வைத்து, எள் தண்ணீர் இரைத்து, முன்னோர்களை வழிபட்டனர்.

தொடர்ந்து வீடுகளில் விரதம் இருந்து, முன்னோர் படங்களுக்கு முன் உணவை படைத்து வழிபட்டனர். காகங்களுக்கு உணவு, பசுமாடுகளுக்கு அகத்திக்கீரை வழங்கினர்.






      Dinamalar
      Follow us