sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விவசாயமற்ற பணிக்கு உரம் பயன்படுத்தினால் உரிமம் ரத்து

/

விவசாயமற்ற பணிக்கு உரம் பயன்படுத்தினால் உரிமம் ரத்து

விவசாயமற்ற பணிக்கு உரம் பயன்படுத்தினால் உரிமம் ரத்து

விவசாயமற்ற பணிக்கு உரம் பயன்படுத்தினால் உரிமம் ரத்து


ADDED : பிப் 21, 2025 01:15 AM

Google News

ADDED : பிப் 21, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:சேலம் மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில், 70,140 ெஹக்டரில் நிலக்கடலை, மக்காச்சோளம், எள், பருத்தி, பயிறு வகைகள், கரும்பு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு தேவையான அனைத்து வகை உரங்கள், தனியார், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை நடக்கிறது.

அண்மையில் அண்டை மாவட்டங்களில் யுரியா பயன்பாடு விவசாயத்துக்கு அல்லாமல் வேறு வகையில் பயன்படுத்த இருப்பு வைக்கப்பட்டிருப்பதை, தரக்கட்டுப்பாடு பிரிவு அலுவலர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனால் மாவட்டத்தில் மொத்த, சில்லரை உர விற்பனையாளர்கள், உர வகைகளை விவசாய பயன்பாட்டுக்கு மட்டும் விற்க வேண்டும். குறிப்பாக யுரியா உர வகைகளை விற்கும்போது விவசாயிகள் தேவை அறிந்து உரிய ஆதார் எண் பெற்று, விற்பனை முனைய கருவி மூலம் விற்க வேண்டும். உர வகைகளின் இருப்பு, விற்பனையில் முறைகேடு கண்டறியப்பட்டால் உரிய நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.






      Dinamalar
      Follow us