/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மக்களுக்கு தேவையான திட்டங்கள்அனைத்தும் செயல்படுத்தி உள்ளேன்'
/
'மக்களுக்கு தேவையான திட்டங்கள்அனைத்தும் செயல்படுத்தி உள்ளேன்'
'மக்களுக்கு தேவையான திட்டங்கள்அனைத்தும் செயல்படுத்தி உள்ளேன்'
'மக்களுக்கு தேவையான திட்டங்கள்அனைத்தும் செயல்படுத்தி உள்ளேன்'
ADDED : மார் 06, 2025 01:31 AM
'மக்களுக்கு தேவையான திட்டங்கள்அனைத்தும் செயல்படுத்தி உள்ளேன்'
இடைப்பாடி:இடைப்பாடி ஒன்றிய அலுவலகத்தில், பல்வேறு திட்டப்பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. அதில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 1.93 கோடி, எம்.பி., தொகுதி நிதியில், 1.15 கோடி என, 3.09 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தொடர்ந்து முடிவுற்ற பணிகள் திறப்பு விழா நடந்தது. அ.தி.மு.க., நகர செயலர் முருகன் வரவேற்றார்.
எதிர்க்கட்சி தலைவர், இ.பி.எஸ்., திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசுகையில், ''இடைப்பாடி தொகுதியில் அரசு கல்லுாரி, கூட்டுக்குடிநீர் திட்டங்கள், தரமான சாலைகள், அரசு கட்டடங்கள் என, மக்களுக்கு தேவையான திட்டங்கள், அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டங்கள் என அனைத்தும் செயல்படுத்தி உள்ளேன்,'' என்றார். ஒன்றிய குழு முன்னாள் தலைவர்கள் மணி, மாதேஸ், குப்பம்மாள், நகராட்சி முன்னாள் தலைவர்
கதிரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.