/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரியம்மன் கோவில் தீ மிதி விழாநேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
/
மாரியம்மன் கோவில் தீ மிதி விழாநேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மாரியம்மன் கோவில் தீ மிதி விழாநேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மாரியம்மன் கோவில் தீ மிதி விழாநேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ADDED : ஏப் 04, 2025 01:37 AM
மாரியம்மன் கோவில் தீ மிதி விழாநேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
இடைப்பாடி:கல்வடங்கம் அருகே நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 18ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதை ஒட்டி நடந்த தீ மிதி விழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர், எலுமிச்சை அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி வந்தும், தீ மிதித்தனர். பலர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
கரிய காளியம்மன்
அதேபோல் நங்கவள்ளி அருகே சூரப்பள்ளி கோட்டைமேடு கரிய காளியம்மன், சக்தி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று சக்தி மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டம், அம்மன் ஊர்வலம், கரிய காளியம்மன் கோவிலில் வண்டி வேடிக்கை, அம்மன் ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் ஓமலுார், முத்துநாயக்கன்பட்டியில் உள்ள பில்லுக்கடை மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திகடன் செலுத்தினர்.