sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தி.கோடு அரசு மருத்துவமனையில்புதிய கட்டட பணி: கலெக்டர் ஆய்வு

/

தி.கோடு அரசு மருத்துவமனையில்புதிய கட்டட பணி: கலெக்டர் ஆய்வு

தி.கோடு அரசு மருத்துவமனையில்புதிய கட்டட பணி: கலெக்டர் ஆய்வு

தி.கோடு அரசு மருத்துவமனையில்புதிய கட்டட பணி: கலெக்டர் ஆய்வு


ADDED : ஏப் 15, 2025 01:56 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.கோடு அரசு மருத்துவமனையில்புதிய கட்டட பணி: கலெக்டர் ஆய்வு

திருச்செங்கோடு:திருச்செங்கோட்டில், நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக, 23 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும், தரைத்தளத்துடன் கூடிய, ஐந்தடுக்கு மாடி கட்டட பணிகளை, கலெக்டர் உமா, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை, திருச்செங்கோட்டில் வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், நாமக்கல் நகரில் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைந்துவிட்டதால், மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், 11,000 சதுர மீட்டர் பரப்பளவில், தரைத்தளத்துடன் கூடிய, ஐந்தடுக்கு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று கட்டட பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் திறப்பு விழா நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us