/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கணவனுடன் வீட்டில் துாங்கிய பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு
/
கணவனுடன் வீட்டில் துாங்கிய பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு
கணவனுடன் வீட்டில் துாங்கிய பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு
கணவனுடன் வீட்டில் துாங்கிய பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு
ADDED : செப் 02, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரி, எம்.காளிப்பட்டி, சாமியப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 45, தனியார் இரும்பாலை ஊழியர். இவரது மனைவி சாந்தி, 38; இருவரும் நேற்று முன்-தினம் இரவு வீட்டு மாடியில் துாங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமி, சாந்தி அணிந்திருந்த ஏழு பவுன் நகையை கொள்ளைய-டித்து சென்றான்.
இதேபோல் மேச்சேரியை அடுத்த குக்கல்பட்டியில், ஜவுளி கடை உரிமையாளர் சீனிவாசன் வீட்டில் திருட முயற்சி நடந்துள்ளது. இரு சம்பவங்கள் குறித்தும், மேச்சேரி போலீசார் விசாரிக்கின்-றனர்.