ADDED : ஜன 22, 2025 01:18 AM
அ நிறம் | அளவு
பா.ஜ.,வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
சேலம்,:அசாம் மாநில போலீசார், காங்., - எம்.பி., ராகுல் மீது வழக்குபதிவு செய்திருப்பதை கண்டித்து, சேலம், கோட்டை மைதானத்தில், மாநகர் காங்., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். அதில், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சுப்ரமணி, மாநகர் பொருளாளர் ராஜகணபதி, செயலர் சுப்ரமணி உள்பட பலர்
பங்கேற்றனர்.அதேபோல் சேலம் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
