/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊசி போட்டு வைத்தியம் 'பிசியோதெரபிஸ்ட்' கைது
/
ஊசி போட்டு வைத்தியம் 'பிசியோதெரபிஸ்ட்' கைது
ADDED : ஆக 26, 2024 02:55 AM
ஓமலுார்: காடையாம்பட்டி, கே.மோரூரை சேர்ந்த, பிசியோதெரபிஸ்ட் விஜயகுமார், 33. இவர், 14 ஆண்டுகளாக, 'பிசியோ கிளினிக்' நடத்தி வந்தார். அங்கு சில மாதங்களாக அவர், நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளிப்பதாக, தீவட்டிப்பட்டி போலீசா-ருக்கு தகவல்
கிடைத்தது.
இதனால் போலீசார், கே.என்.புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருடன் நேற்று கிளினிக் சென்றனர். அப்போது விஜயகுமார், ஊசி, மருந்து, மாத்திரைகள், குளுக்கோஸ் பாட்-டில்கள்  உள்ளிட்ட பல்வேறு மருந்துகளுடன் சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்ததாக இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து விஜயகுமாரை கைது
செய்தனர்.

