sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துாய்மை பணியாளர் சாலை மறியல் சென்னைக்கு அனுமதித்த போலீசார்

/

துாய்மை பணியாளர் சாலை மறியல் சென்னைக்கு அனுமதித்த போலீசார்

துாய்மை பணியாளர் சாலை மறியல் சென்னைக்கு அனுமதித்த போலீசார்

துாய்மை பணியாளர் சாலை மறியல் சென்னைக்கு அனுமதித்த போலீசார்


ADDED : ஆக 26, 2024 02:56 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துாய்மை பணியாள-ரான, 57 பேர், கொரோனா காலத்தில் பணியாற்றிய நிலுவைத்-தொகை கேட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க, நேற்று முன்தினம் இரவு, துாய்மை பணியாளர்களின் மேலாளர் நாகேந்திரன் தலை-மையில், 54 பெண்கள் உள்பட, 57 பேர், ஒரு பஸ்சில் சென்னை நோக்கி புறப்பட்டனர்.

இதை தாமதமாக அறிந்த கோவை போலீசார், சேலம், கள்ளக்கு-றிச்சி மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்தனர். நேற்று முன்-தினம் நள்ளிரவு 12:30 மணிக்கு, சேலம் மாவட்ட

எல்லையில் உள்ள தலைவாசல், நத்தக்கரை சுங்கச்சாவடிக்கு பஸ் வந்தபோது, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் நிறுத்தி கோவைக்கு திரும்ப அறிவுறுத்தினர்.

அவர்கள் செல்ல மறுத்து, சுங்கச்சாவடி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து பஸ்சில் இருந்த துாய்மை பணியாள-ரான, உக்கடத்தை சேர்ந்த ஸ்ரீவித்யா, 39, வெளியே குதித்தார். இதில் காயம் அடைந்த அவரை, ஆம்புலன்ஸ் மூலம் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து மீண்டும் அழைத்துச்சென்றனர். அதேநேரம், துாய்மை பணியாளர்களிடம் பேச்சு நடத்தி, பின் சென்னை செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை, 2:00 மணிக்கு அவர்கள் புறப்பட்டனர்.






      Dinamalar
      Follow us