/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகையிலை கடத்திய 2 டிரைவர்கள் கைது சொகுசு பஸ் பறிமுதல்
/
புகையிலை கடத்திய 2 டிரைவர்கள் கைது சொகுசு பஸ் பறிமுதல்
புகையிலை கடத்திய 2 டிரைவர்கள் கைது சொகுசு பஸ் பறிமுதல்
புகையிலை கடத்திய 2 டிரைவர்கள் கைது சொகுசு பஸ் பறிமுதல்
ADDED : மார் 02, 2025 07:04 AM
சேலம்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, தென்காசி மாவட்-டத்துக்கு நேற்று முன்தினம் இயக்கப்பட்ட சொகுசு பஸ்சில் புகையிலை கடத்தப்படுவதாக, சேலம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார், பழைய பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று அதி-காலை, 4:15 மணிக்கு, அந்த பஸ், அங்கு வந்தது. பயணியர் இறக்கி விடப்பட்டனர். பின் போலீசார், பஸ்சை சோதனை செய்-தபோது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், 102 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. இதனால், அதில் இருந்த, 29 பயணியரை, மாற்று பஸ் மூலம் தென்காசிக்கு அனுப்பினர்.விசாரணையில் பஸ் டிரைவர்கள், தென்காசி மாவட்டம் சிவரம்-பட்டியை சேர்ந்த பிரேம்குமார், 29, லத்துார் சரவணகுமார், 27, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், புகை-யிலை பொருட்கள், சொகுசு பஸ்சை பறிமுதல் செய்தனர்.