ADDED : ஜன 24, 2025 01:34 AM
அ நிறம் | அளவு
சிறுமியை சீண்டிய தொழிலாளிக்கு5 ஆண்டு சிறை
சேலம், : மேட்டூர், சூரப்பள்ளி மோட்டூர் கட்டிவளவை சேர்ந்தவர் சின்னப்பையன், 52. இவர், 2023, மே, 11ல், ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, சின்னப்பையனை கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று, சின்னப்பையனுக்கு, 5 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
