/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க., 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறும்'
/
'வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க., 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறும்'
'வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க., 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறும்'
'வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க., 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறும்'
ADDED : ஆக 31, 2024 01:30 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள், உறுப்-பினர்கள் ஆலோசனை கூட்டம், அமானி கொண்டலாம்பட்டியில் நேற்று நடந்தது. வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, பனமரத்துப்-பட்டி மேற்கு ஒன்றிய செயலர் ஜெகநாதன் முன்னிலை வகித்-தனர். அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கு, கட்சி உறுப்-பினர் அட்டையை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:லோக்சபா தேர்தலில் தி.மு.க., 18 கட்சிகளுடன் கூட்டணியில் நின்றன. இ.பி.எஸ்., தனி மனிதராக சுழன்று, 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்து, 1.10 கோடி ஓட்டுகள் பெற்றோம். தி.மு.க., கூட்-டணி இல்லாமல் தனித்து
நின்றிருந்தால், 40 தொகுதிகளிலும் டிபாசிட் இழந்திருக்கும். இ.பி.எஸ்., முதல்வராக இருந்தபோது, வீரபாண்டி தொகுதிக்கு, 1,000 கோடி ரூபாய் அளவில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித்தந்தார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த
பின், எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. வரும் சட்ட-சபை தேர்தலில், வீரபாண்டி தொகுதியில், 50,000 ஓட்டுகள் வித்தி-யாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் ஒன்றிய அவைத்தலைவர் தங்கவேல், பொருளாளர் சேகர், ஒன்றிய துணை செயலர் செந்தில்குமார், கவுன்சிலர் மஞ்சுளா முருகன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் பழனிசாமி உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.