/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாயி விளக்கை போட்டதால் 'டவுசர்' கொள்ளையர்கள் ஓட்டம்
/
விவசாயி விளக்கை போட்டதால் 'டவுசர்' கொள்ளையர்கள் ஓட்டம்
விவசாயி விளக்கை போட்டதால் 'டவுசர்' கொள்ளையர்கள் ஓட்டம்
விவசாயி விளக்கை போட்டதால் 'டவுசர்' கொள்ளையர்கள் ஓட்டம்
ADDED : செப் 07, 2024 08:17 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரம், நேதாஜி நகரை சேர்ந்த விவசாயி தங்கவேல், 63. இவர் வீட்டின் வெளியே நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு சத்தம் கேட்க, சந்தேகம் அடைந்து வீடு, வெளிப்புற மின்விளக்குகளை போட்டார். அப்போது, 4 பேர் வேகமாக ஓடினர். வீட்டில் இருந்த, இரு, 'சிசிடிவி' கேமராக்கள் பதிவை பார்த்தபோது, முக-மூடி அணிந்த, 4 பேர், டவுசர் மட்டும் அணிந்து, அரை நிர்வா-ணத்துடன் வீட்டுக்கு வந்ததும், கேமராவை மறைத்ததும் பதி-வாகி இருந்தது. இந்த வீடியோ வலைதளங்களில் பரவி வருகி-றது. தொடர்ந்து தங்கவேல் புகார்படி ஆத்துார் டவுன் போலீசார், டவுசர் கொள்ளையர்களை தேடுகின்றனர்.
இரவில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடும் நிலையில் டவுசர் கொள்ளையர்கள் சிக்காததால், கண்காணிப்பு பணியை தீவிரப்ப-டுத்த, அப்பகுதி மக்கள் வலியறுத்தினர்.