/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கடவுள் மறுப்பு அரசால் சிலைகளுக்கு தடை'
/
'கடவுள் மறுப்பு அரசால் சிலைகளுக்கு தடை'
ADDED : ஆக 31, 2024 01:31 AM
சேலம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மாநில அளவில் ஆலோசனை கூட்டம் சேலம், மரவனேரியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், சதுர்த்தி குறித்து, நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.
தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி, செப்., 7ல் கொண்டாடப்பட உள்ளது. தமிழ-கத்தில் இந்து முன்னணி சார்பில், 1.50 லட்சம் சிலைகள் வைத்து கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. 15 லட்சம் வீடுகளில் வழிப-டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிலைகள், 10 அடிக்குள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் இரு கட்சிகள், சதுர்த்திக்கு இடைஞ்சலாக உள்ளன. மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில், 20 முதல், 30 அடி வரை சிலை வடிவமைத்து, சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். தமிழ-கத்தில் கடவுள் மறுப்பு அரசால்
சிலைகளுக்கு தடை செய்கின்-றனர். எதிர்காலத்தில் சதுர்த்திக்கு தடை ஏற்பட்டால் இந்த ஆட்-சிக்கு பின்னடைவு தான் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.மாநில செயலர் வெங்கடேஷ்வரன், மாவட்ட தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.