/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணைக்கு வரத்து சரிவால் நீர் திறப்பு நிறுத்தம்
/
மேட்டூர் அணைக்கு வரத்து சரிவால் நீர் திறப்பு நிறுத்தம்
மேட்டூர் அணைக்கு வரத்து சரிவால் நீர் திறப்பு நிறுத்தம்
மேட்டூர் அணைக்கு வரத்து சரிவால் நீர் திறப்பு நிறுத்தம்
ADDED : ஆக 19, 2024 06:13 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த, 12ம் தேதி முதல் நேற்று வரை, 120 அடியாக தொடர்கிறது.
நேற்று முன்தினம் மாலை, 26,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்ததால், 16 கண் மதகு வழியாக, 4,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.நேற்று காலை, 7:30 மணிக்கு, 16,500 கன அடியாக நீர்வரத்து சரிந்தது. இதனால் பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியே, 16,000 கன அடி, கால்வாயில், 500 கன அடி நீர் திறக்கப்பட்டு, 16 கண் மதகு வழியாக நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
மழை தீவிரம் குறைவுகாவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்தினம், 16,635 கனஅடி-யாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்வரத்து, 13,127 கன-அடியாகவும், 4,509 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து, 2,966 கன அடியாகவும் குறைந்தது. இதில் கே.ஆர்.எஸ்.,ல், 8,200 கனஅடி உபரி நீர், கபினியில், 1,500 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.