sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் வைத்து வழிபாடு

/

போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் வைத்து வழிபாடு

போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் வைத்து வழிபாடு

போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் வைத்து வழிபாடு


ADDED : ஜூலை 31, 2024 07:45 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: கெங்கவல்லி அருகே நடுவலுாரில் கைலாச-நாதர், அருங்காட்டம்மன், பெரிய அம்மன், சின்ன அம்மன், காங்குடையான், பெரியசாமி உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. அங்கு, 21 ஆண்டுகளுக்கு பின், கடந்த, 19ல் தேர் திருவிழா தொடங்கியது. கடந்த, 24ல் அருங்காட்டம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. 25ல் ஒருதரப்பினர், காங்கு-டையான் கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் டி.எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதையடுத்து நேற்று காங்குடையான் கோவிலில் பொங்கல் வைத்தல், கிடா வெட்-டுதல் விழா நடந்தது. இதில் பொங்கல் வைத்து, 300 கிடா, 700க்கும் மேற்பட்ட கோழி-களை பலியிட்டு வழிபட்டனர். இதையொட்டி ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில், 90 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஏற்காடு மாரியம்மன்ஏற்காடு, ஜெரீனாக்காடு பெரிய மாரியம்மன் கோவிலில் கடந்த ஜூன், 12ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48ம் நாளான நேற்று சங்கு பூஜை, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனின் சிலையை பக்தர்கள் ஒன்று கூடி தோளில் துாக்கியபடி கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் ஊர்வலம் வந்தனர். பின் விளக்குகளால் அலங்-கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து, ஏற்-காடு பஸ் ஸ்டாண்ட் வழியே லாங்கில்-பேட்டை, முருகன் நகர், எம்.ஜி.ஆர்., நகர் கிரா-மங்களுக்குள் ஊர்வலமாக எடுத்துச்சென்று, மீண்டும் இரவு, 8:25க்கு கோவிலை அடைந்-தனர். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்-தனர்.






      Dinamalar
      Follow us