/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., நிர்வாகியை வேறு ஸ்டாப்பில் இறக்கியதால் தனியார் பஸ் சிறைபிடிப்பு
/
தி.மு.க., நிர்வாகியை வேறு ஸ்டாப்பில் இறக்கியதால் தனியார் பஸ் சிறைபிடிப்பு
தி.மு.க., நிர்வாகியை வேறு ஸ்டாப்பில் இறக்கியதால் தனியார் பஸ் சிறைபிடிப்பு
தி.மு.க., நிர்வாகியை வேறு ஸ்டாப்பில் இறக்கியதால் தனியார் பஸ் சிறைபிடிப்பு
ADDED : செப் 07, 2024 08:17 AM
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஓலப்பாடியை சேர்ந்தவர் சுப்ர-மணியம், 81. தி.மு.க., பொதுக்குழு முன்னாள் உறுப்பினரான இவர் நேற்று காலை, 9:00 மணிக்கு ஆத்துாரில் இருந்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில், பெத்தநாயக்கன்பாளையம் செல்ல ஏறினார்.
ஆனால் அந்த பஸ், பெத்தநாயக்கன்பாளையம் செல்லாமல் புத்தி-ரகவுண்டன்பாளையம் ஸ்டாப்பில் சுப்ரமணியத்தை இறக்கிச்-சென்றது. அதே பஸ் சேலத்தில் இருந்து ஆத்துார் செல்வதற்கு, மதியம், 3:30 மணிக்கு, பெத்தநாயக்கன்பாளையம் வழியே வந்-தது. அப்போது சுப்ரமணியத்தின் உறவினர்கள், மக்கள், பஸ்சை சிறைபிடித்து டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். ஏத்தாப்பூர் போலீசார், வருவாய்த்துறையினர், பேச்சு நடத்தி, பஸ் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் மாலை, 4:00 மணிக்கு மக்கள் பஸ்சை விடுவித்தனர்.