ADDED : செப் 10, 2024 07:04 AM
ஓமலுார்: 'அன்னை பெயரில் ஒரு மரம்' என்ற திட்டத்தில், சேலம் விமான நிலையத்தில் அமைச்சர் நேரு மரக்கன்று நட்டார்.
பன்னாட்டு சிவில் விமான போக்குவரத்து நிறுவனத்தின், 80வது ஆண்டு விழா மற்றும் 2வது ஏசியா பசிபிக் மினிஸ்டிரியல் மாநாடு புதுடில்லியில் வரும், 11,12 ஆகிய நாட்களில் நடைபெறு-கிறது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, இந்திய சிவில் விமான போக்-குவரத்து அமைச்சகம், 'அன்னை பெயரில் ஒரு மரம்' என்ற திட்-டத்தின் மூலம், 80 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை துவக்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று, சேலத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்-கேற்க வந்த அமைச்சர் நேரு, விமான நிலையத்தில் மரக்கன்று நட்டார். அவரை தொடர்ந்து சேலம் வடக்கு எம்.எல்.ஏ., ராஜேந்-திரன், கலெக்டர் பிருந்தாதேவி
ஆகியோர் மரக்கன்றுகளை நட்-டனர். விமான நிலைய இயக்குனர்கள் விஜய்உபாத்யா, வைதேகி-நாதன் உடனிருந்தனர்.

