ADDED : ஆக 31, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: சேலம் கனிம வளத்துறை உதவி புவியியலாளர் அரவிந்த், தார-மங்கலம், துட்டம்பட்டி புறவழிச்சாலை ரவுண்டானாவில் நேற்று வாகனச்சோதனை மேற்கொண்டார். அப்போது வந்த டாரஸ் லாரியை நிறுத்தியபோது, அதன்
டிரைவர், இறங்கி ஓடிவிட்டார். லாரியை சோதனை செய்தபோது, உரிமமின்றி, 5 யுனிட் மண் கடத்தி வந்தது தெரிந்தது. அரவிந்த் புகார்படி தாரமங்கலம் போலீசார், லாரியை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.