ADDED : ஏப் 06, 2025 01:43 AM
அ நிறம் | அளவு
வக்ப் சட்டத்துக்கு ம.நீ.மை., கண்டிப்பு
சேலம்:சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த, மக்கள் நீதி மைய நிர்வாகிகளுடன், மண்டல ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. மண்டல செயலர் காமராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் தங்கவேல், மவுரியா, விவசாய சங்க தலைவர் மயில்சாமி, சேலம் மாநகர செயலர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாநில துணைத்தலைவர் தங்க வேல் நிருபர்களிடம் கூறியதாவது: வரும், 2026 சட்டசபை தேர்தல் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது வரை, தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
