/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
/
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஏப் 10, 2025 01:58 AM
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
வாழப்பாடி:வாழப்பாடி, கொட்டவாடி பிரிவு சாலை அருகே, புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவுக்கு, கடந்த, 25ல் கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் நடந்தது.
நேற்று முன்தினம் ஊர் மாரியம்மன் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மன் புறப்பட்டு, சின்னகிருஷ்ணாபுரத்தில் இருந்து புதுப்பட்டி மாரியம்மன் கோவிலை அடைந்தது.
நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், புதுப்பட்டி மாரியம்மன் சுவாமிக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழி வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள், வேண்டுதல் நிறைவேற்றிய அம்மனுக்கு, உடலில் அலகு குத்தி, பூங்கரகம், அக்னி கரகம் எடுத்தும், உருளுதண்டம் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாலை, 5:00 மணிக்கு ஏராளமான பக்தர்கள், கோவிலை சுற்றி தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு தெருக்கூத்து நடந்தது. தொடர்ந்து இன்று, தேரை இழுத்து, நிலை நிறுத்தப்படுகிறது. நாளை கம்பம் எடுத்தல், மஞ்சள் நீராட்டம் நடக்க உள்ளது.