ADDED : ஏப் 12, 2025 01:45 AM
அ நிறம் | அளவு
நிலுவை பட்டா வழங்கஎம்.எல்.ஏ., அறிவுரை
மேட்டூர்:மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், அத்தொகுதி, பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் தொகுதியில் நிலுவையில் உள்ள பட்டாக்களை உடனே வழங்க வேண்டும். வருவாய்த்துறையில், 15 கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதால் நிரப்ப வேண்டும்.
துாக்கனாம்பட்டியில் படகுத்துறை அமைக்க, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட, பல்வேறு அறிவுரைகளை எம்.எல்.ஏ., வழங்கினார். ஆர்.டி.ஓ., சுகுமார், தாசில்தார் ரமேஷ், நகராட்சி கமிஷனர் நித்யா, வருவாய், பொதுப்பணித்துறையினர், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்.
