ADDED : செப் 11, 2024 06:59 AM
ஆத்துார்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர், செல்வகுமாரி, 35. இவர் நேற்று மாலை, 5:00 மணிக்கு வீட்டின் வெளியே துணி துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது ரத்தம் சொட்ட, சொட்ட வந்த ஒரு நாய், செல்வகுமாரியை கை பகுதியில் கடித்து குதறியது. விரட்டியபோதும் தொடர்ந்து கடித்-தது.அதே நாய், ஒண்டிக்கடையில் விவசாயத்தோட்டத்தில் பூக்கள் எடுத்துக்கொண்டிருந்த தனலட்சுமி, 39, அபிராமி, 27, மற்றும், 5 வயது சிறுவன் உள்பட, 5 பேரை அடுத்தடுத்து கடித்தன. இவர்கள் கை, கால், விரல் பகுதிகளில் காயம் அடைந்து ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் 10 பேர், ஆத்துார், சேலத்தில் உள்ள, தனியார் மருத்து-வமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆத்துாரை சேர்ந்த இருவர் என நேற்று ஒரே நாளில், 17 பேர் நாய் கடித்ததாக, அரசு, தனியார் மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டனர். தெருநாய்கள் வெறி நாய்களாக மாறி கடித்து வருவதால் கட்டுப்படுத்த வேண்டும் என, பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தினர்.