/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடத்தப்பட்ட மாணவி திருமண கோலத்தில் மீட்பு
/
கடத்தப்பட்ட மாணவி திருமண கோலத்தில் மீட்பு
ADDED : மார் 04, 2025 06:18 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்-சூரை சேர்ந்த, 17 வயதான பிளஸ் 2 மாணவி, கடந்த, 1ம் தேதி இரவு மாயமானார். ராசிபு-ரத்தை சேர்ந்த ஒருவருடன் சிறுமி பழகிய நிலையில், அவர்கள் திருமணம் செய்து வைக்-கும்படி பெண் கேட்டுள்ளனர். சிறுமியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்த நிலையில் காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.சேலம் அருகே தாசநாயக்கன்பட்டியில் மாண-வியை கடத்தி சென்ற கார் இருப்பது தெரிந்து, சிறுமியின் பெற்றோர் சென்றனர். அப்போது காருடன் கும்பல் தப்பியது. புகாரின்படி தலை-வாசல் போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.இந்நி-லையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மெட்டாலாவில் உள்ள ஒரு கோவிலில், சிறுமி இருப்பது தெரிந்து தனிப்படை போலீசார் நேற்று விரைந்தனர்.
திருமணம் முடிந்த நிலையில் இருந்த சிறுமி, தாலி கட்டிய நபரை பிடித்த போலீசார், ஆத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்-றனர். தற்போது விரிவான விசாரணை நடக்கி-றது. அது முடிந்த பிறகே, முழு விபரங்களை தெரிவிக்க முடியும் என்று, தனிப்படை போலீசார் தெரிவித்-தனர்.