/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு
/
லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு
ADDED : டிச 07, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: தாரமங்கலம், எலவம்பட்டி, பூசாரியூரை சேர்ந்தவர் நல்லதம்பி, 73. இவருக்கு மனைவி சகுந்தலா, 65, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். நல்லதம்பி, நேற்று காலை மாமியார் இறந்துவிட்டதால், காடையாம்பட்டி, ஊமகவுண்டம்பட்டிக்குசென்றார். பின், 'சைன்' பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். மதியம், 2:15 மணிக்கு, காமலாபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் சர்வீஸ் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, பைக் பின்புறம் லாரி மோதியது. இதில் நல்லதம்பி தடுமாறி
விழுந்தபோது, லாரி ஏறியதில் சம்பவ இடத்தில் இறந்தார். லாரியை கைப்பற்றி, ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.