/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதியற்ற பள்ளி கட்டடம் வரன்முறைப்படுத்த வாய்ப்பு
/
அனுமதியற்ற பள்ளி கட்டடம் வரன்முறைப்படுத்த வாய்ப்பு
அனுமதியற்ற பள்ளி கட்டடம் வரன்முறைப்படுத்த வாய்ப்பு
அனுமதியற்ற பள்ளி கட்டடம் வரன்முறைப்படுத்த வாய்ப்பு
ADDED : செப் 04, 2024 09:17 AM
சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்-டுள்ள அறிக்கை:
மாவட்டத்தில், 2011 ஜன.,1க்கு முன்பாக, திட்ட-மில்லா பகுதிகளில் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணை-யதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஆக.,1 முதல், 2025 ஜன.,31 வரை ஆறு மாத காலம் காலம் நீட்டிப்பு செய்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே திட்டமில்லா, அனுமதியற்ற மலையி-டப்பகுதியில் அமைந்துள்ள கட்டடங்களுக்கு, அரசு தெரிவித்துள்ள அனைத்து வழிமுறை-களை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க விரும்புப-வர்கள், www.tcp.org.in என்ற இணையதள முகவ-ரியில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.