/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டில் மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் மீட்பு
/
வீட்டில் மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் மீட்பு
ADDED : ஜூலை 04, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் மாவட்டம் வனவாசியை சேர்தவர் ராஜலட்சுமி, 85. சேலம், தாதகாபட்டி அம்பாள் ஏரி சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். சில நாட்களாக வீட்டில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இந்நிலையில் துர்நாற்றம் வீச, மக்கள் தக-வல்படி, அன்னதானப்பட்டி போலீசார் வந்து பார்த்தனர்.
கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ராஜலட்சுமி இறந்து கிடந்ததோடு, உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா, வேறு கார-ணமா என விசாரிக்கின்றனர்.