ADDED : ஜூலை 22, 2024 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார் ப.வேலுார் அருகே, பாலப்பட்டியை சேர்ந்தவர் அரவிந்தன், 23.
கரூர் நகரை சேர்ந்தவர் பாலாஜி, 32. இவர்கள் இருவரும், பாலப்பட்டியில் குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக, ப.வேலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, எஸ்.ஐ., குமார், நேற்று பாலப்பட்டியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது குட்கா பொருட்கள் விற்-பனை செய்து கொண்டிருந்த அரவிந்தன், பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.