/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்களில் ஓசி பயணம் ரூ.1.03 கோடி அபராதம்
/
ரயில்களில் ஓசி பயணம் ரூ.1.03 கோடி அபராதம்
ADDED : செப் 04, 2024 11:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில், கடந்த மாதம் ஓசி பயணம் செய்தவர்களிடமிருந்து, ரூ.1.03 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதி-களில், ரயில்கள் மற்றும் ஸ்டேஷன்களில், டிக்கெட் பரிசோதகர்கள் தலைமையிலான குழு-வினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் கடந்த மாதம் டிக்கெட் இன்றி பய-ணித்த, 10 ஆயிரத்து, 340 பேரிடமிருந்து, 69.46 லட்சம், முறையான டிக்கெட் இன்றி பயணித்த, 7,264 பேரிடமிருந்து, 34.02 லட்சம், விதி மீறி அதிக லக்கேஜ் எடுத்து சென்ற, 39 பயணிகளிட-மிருந்து, 22 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 1.03 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.