sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கண்விழி சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விற்பனை 1,262 ரேஷன் கடைகளில் சோதனை முயற்சி

/

கண்விழி சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விற்பனை 1,262 ரேஷன் கடைகளில் சோதனை முயற்சி

கண்விழி சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விற்பனை 1,262 ரேஷன் கடைகளில் சோதனை முயற்சி

கண்விழி சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விற்பனை 1,262 ரேஷன் கடைகளில் சோதனை முயற்சி


ADDED : ஆக 08, 2024 02:02 AM

Google News

ADDED : ஆக 08, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,

சேலம் மாவட்டத்தில், 1,262 ரேஷன் கடைகளில் கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விற்பனை நடந்து வருகின்றன.

சேலம் மாவட்டத்தில், 1,732 ரேஷன் கடைகள் மூலம், 11 லட்சம் கார்டுதாரர்களுக்கு அத்யாவசிய பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதில் முறைகேடுகளை தடுக்க பி.ஒ.எஸ்.,(பாயின்ட் ஆப் சேல்) கருவி மூலம் பொருட்கள் விற்பனை நடந்தது. அந்த கருவியில் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினரின் கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் விற்பதன் மூலம் கார்டுக்கு உரியவர் மட்டும் ரேஷன் கடைக்கு வருவது உறுதி செய்யப்பட்டதால் முறைகேடு கட்டுக்குள் வந்தது. இருப்பினும், 'சர்வர்' பிரச்னையால் விரல்ரேகை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. அத்துடன் ரேஷன் கடைக்கு வர இயலாதவர்களால் பரிந்துரைக்கப்படும் நபர்கள், ரேஷன் பொருட்களை வாங்கி செல்வதன் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. 100ல், 30 கார்டுகளுக்கு பரிந்துரை கடிதம் மூலம் பொருட்கள் வினியோகம் இருந்தது. அதையும் கட்டுப்படுத்தி ரேஷன் கடை சேவையை மேம்படுத்த, கண் கருவிழி சரிபார்ப்பை உறுதி செய்து பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்தது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் முழு நேரமாக செயல்படும் 1,262 ரேஷன்கடைகளுக்கு கண் கருவிழி சரிபார்ப்பு கருவி வழங்கப்பட்டு, கடந்த, 29 முதல் சோதனை முயற்சியாக, கருவிழியை உறுதிப்படுத்தி அதன் மூலம் பொருட்கள் விற்பனை தொடர்ந்தது. தற்போது சில கடைகளை தவிர்த்து பெரும்பாலானவற்றில் கருவிழி சரிபார்ப்பு மூலம் ரேஷன் பொருட்கள் விற்பனை நடந்து வருகின்றன.

இதுகுறித்து சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் கூறியதாவது: கண்விழி சரிபார்ப்பு மூலம், 10 - 15 வினாடிகளில் கார்டுதாரர் என உறுதி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் அனைத்து முழு நேர ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு மூலமே விற்பனை முழுவீச்சில் நடக்கிறது. பொட்டலம் மூலம் பொருட்கள் விற்பனை தற்போது சோதனை முயற்சியாக உள்ளது. நுகர்வோரின் வரவேற்பை பொறுத்து அதையும் விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us