ADDED : ஏப் 03, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடகை செலுத்தாத 21 கடைக்கு பூட்டு
ஆட்டையாம்பட்டி:ஆட்டையாம்பட்டி டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமாக, அங்குள்ள பஸ் ஸ்டாண்ட், சேலம், திருச்செங்கோடு பிரதான சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில், 60 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதில், 21 கடைக்காரர்கள், கடந்த ஆண்டில் பாக்கி வைத்து, 2025 - 26ம் ஆண்டு முழுதும் பணம் கட்டாமல் இழுத்தடித்தனர்.
இதில், 2024 - -25ம் ஆண்டில் மட்டும், 39 லட்சம் ரூபாய் நிலுவை இருந்தது.இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பலமுறை கேட்டும் வாடகை கட்டவில்லை. இதனால் நேற்று முன்தினம், டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள், 21 கடைகளுக்கு பூட்டு போட்டனர்.

