/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மார்ச் 3ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆரம்பம்சேலம் மாவட்டத்தில் 37,213 பேர் தயார்
/
மார்ச் 3ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆரம்பம்சேலம் மாவட்டத்தில் 37,213 பேர் தயார்
மார்ச் 3ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆரம்பம்சேலம் மாவட்டத்தில் 37,213 பேர் தயார்
மார்ச் 3ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆரம்பம்சேலம் மாவட்டத்தில் 37,213 பேர் தயார்
ADDED : பிப் 15, 2025 01:36 AM
மார்ச் 3ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆரம்பம்சேலம் மாவட்டத்தில் 37,213 பேர் தயார்
சேலம்:தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 3 முதல், 25 வரை நடக்கிறது. அதேபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச், 5 முதல், 27 வரையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 28 முதல், ஏப்., 15 வரையும் நடக்க உள்ளது. சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, அரசு, தனியார் என, 320 பள்ளிகளில் இருந்து, 19,866 மாணவர், 17,347 மாணவியர் என, 37,213 பேர் தயாராக உள்ளனர்.
பிளஸ் 1 தேர்வில், 319 பள்ளிகளில் இருந்து, 19,869 மாணவர், 18,028 மாணவியர் என, 37,897 பேர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 522 பள்ளிகளில் இருந்து, 21,008 மாணவர், 20,448 மாணவியர் என, 41,456 பேர் பங்கேற்க
உள்ளனர்.பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு செய்முறை தேர்வு நடந்து வருகிறது. 10ம் வகுப்புக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வு, வரும், 17ல் தொடங்க உள்ளது. மேலும் விடைத்தாள்கள் மாணவர்களின் முகப்பு சீட்டுடன் பாட வாரியாக தைத்து, தேர்வு மையங்களில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.