ADDED : மார் 27, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேர்வு எழுதிய 300 கைதிகள்
சேலம்:சேலம் மத்திய சிறையில், எழுத, படிக்க தெரியாத, 300 கைதிகளுக்கு, தமிழக சிறப்பு எழுத்தறிவு திட்டம் மூலம் பாட புத்தகங்கள் வழங்கி, 6 மாத பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்சி முடிந்த நிலையில் தேர்வு நேற்று நடந்தது. மாநில வயது வந்தோர் கல்வி திட்ட இயக்குனர் நாகராஜ் முருகன், முதன்மை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்யழகன், தேர்வை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கைதிகள் தேர்வு எழுதினர்.