/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி துாய்மை பணியாளருக்கு அரிசி வழங்கல்
/
காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி துாய்மை பணியாளருக்கு அரிசி வழங்கல்
காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி துாய்மை பணியாளருக்கு அரிசி வழங்கல்
காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி துாய்மை பணியாளருக்கு அரிசி வழங்கல்
ADDED : ஜூலை 17, 2024 09:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி : தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின், 122வது பிறந்தநாள் விழா, கொங்கணாபுரம் அருகே மூலப்பாதையில் நேற்று கொண்டாடப்-பட்டது.
இதற்கு தலைமை வகித்து, கோரணம்-பட்டி ஊராட்சி தலைவர் ராஜ்குமார், அந்த ஊராட்சியில் பணிபுரியும் பெண் துாய்மை பணியாளர்களுக்கு, 26 கிலோ கொண்ட அரிசி சிப்பம், சேலை வழங்கினார். அதேபோல் ஆண் துாய்மை பணியாளர்களுக்கு அரிசி சிப்பம், வேட்டி வழங்கினார். தொடர்ந்து விழாவில் பங்-கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
1