/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'திருமணிமுத்தாற்றை பாதுகாப்பது முக்கியம்'
/
'திருமணிமுத்தாற்றை பாதுகாப்பது முக்கியம்'
ADDED : செப் 01, 2024 03:39 AM
வீரபாண்டி: திருமணிமுத்தாற்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில், வரும், 22ல் சேலம் தெய்-வீகம் மண்டபத்தில், 'திருமணிமுத்தாறு திருவிழா' பெயரில், விவசாயிகள், நீர்நிலைகள், பசுக்கள் பாதுகாப்பு மாநாடு நடக்க உள்ளது.
இதுகுறித்து வீரபாண்டி அங்காளம்மன் கோவில் மண்டபத்தில், திருமணிமுத்தாறு பாதுகாப்பு இயக்க தலைவர் சக்கரவர்த்தி தலை-மையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.அதில் இயக்க செயலர் செல்வராஜ் பேசியதாவது:
முன்னோர் துாய்மையான ஆற்றை கொடுத்துச்சென்றனர். அதை பாழ்படுத்தி விட்டோம். அடுத்த தலைமுறைக்கு துாய்மையான நீர் கிடைக்க வேண்டும் எனில் திருமணிமுத்தாற்றை சுத்தப்ப-டுத்தி பாதுகாப்பது முக்கியம். அதற்கு இப்பகுதி விவசாயிகள், திருமணிமுத்தாறு திருவிழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்-கேற்க வேண்டும். ஆற்றில் கழிவு கலப்பதை தடுக்க ஒவ்வொரு-வரும் முடித்த பங்களிப்பை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இயக்க ஒருங்கிணைப்பாளர் வீரபத்மானந்தா, பொருளாளர் சம்பத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.