/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மறுகுடியமர்வு செய்யப்பட்ட பகுதி மக்கள்
/
ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மறுகுடியமர்வு செய்யப்பட்ட பகுதி மக்கள்
ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மறுகுடியமர்வு செய்யப்பட்ட பகுதி மக்கள்
ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மறுகுடியமர்வு செய்யப்பட்ட பகுதி மக்கள்
ADDED : செப் 17, 2024 01:41 AM
ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த
மறுகுடியமர்வு செய்யப்பட்ட பகுதி மக்கள்
ஈரோடு, செப். 17-
சென்னிமலை யூனியன் புஞ்சை பாலத்தொழுவு, வசந்தம் நகர் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று ரேஷன் கார்டு, ஆதார் அட்டையை ஒப்படைத்து, மனு வழங்கி கூறியதாவது:
கடந்த, 2016ல் பெரும்பள்ளம் ஓடைகரையில் வசித்து வந்த எங்களது, 520 வீடுகளை மாவட்ட நிர்வாகம் அகற்றியது. வீடுகளை இழந்தவர்களுக்கு அதே பகுதி, வசந்தம் நகரில் வீட்டுமனை பட்டா வழங்கியது. தற்போது, 150 குடும்பத்தினர் வசிக்கிறோம். பல்வேறு போராட்டங்களுக்கு பின், 5 ஆண்டுக்கு முன், சென்னிமலை - ஊத்துக்குளி சாலையில் இருந்து வசந்தம் நகர் குடியிருப்பை இணைக்கும் சாலைக்கும், குடியிருப்பு பகுதிக்கும் உள்ள இரட்டை சாலைகளுக்கும், ஒற்றை கப்பி சாலை அமைத்தனர். 6 மாதத்துக்குள் தார்ச்சாலையாக மாற்றி தருவதாக தெரிவித்தனர்.
இதுவரை அதே நிலையில் சாலை உள்ளதால், நடந்து செல்வதே சவாலாக உள்ளது. கடந்த, 4 ஆண்டுகளாக தொடர்ந்து மனு வழங்கியும் பலனில்லை. இதை வலியுறுத்தி எங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்தோம். இவ்வாறு கூறினர். மனுவை பெற்ற டி.ஆர்.ஓ., சாந்தகுமார், 'நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளித்தார்.