/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மருத்துவர்கள், செவிலியர் அஞ்சலி பேரணி, ஆர்ப்பாட்டம்
/
சேலம் மருத்துவர்கள், செவிலியர் அஞ்சலி பேரணி, ஆர்ப்பாட்டம்
சேலம் மருத்துவர்கள், செவிலியர் அஞ்சலி பேரணி, ஆர்ப்பாட்டம்
சேலம் மருத்துவர்கள், செவிலியர் அஞ்சலி பேரணி, ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 17, 2024 04:39 AM
சேலம்,: கோல்கட்டாவில், பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள். செவிலியர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் அமைதி பேரணி சென்றனர்.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பெண் பயிற்சி மருத்துவர் கடந்த, 8ல் இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்-பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து மருத்துவர்கள் போராட்-டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் என, 200 க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து பேரணி சென்-றனர். மேலும், தமிழ்நாடு அணைத்து மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தலைவர் அருணாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலி-யுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். கூட்டமைப்பின் செய-லாளர் ஜெயக்குமார், பொருளாளர் தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.