sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

10 ஆண்டுகளில் காணாமல் போன 234 பேரை கண்டுபிடிக்க தனிப்படை

/

10 ஆண்டுகளில் காணாமல் போன 234 பேரை கண்டுபிடிக்க தனிப்படை

10 ஆண்டுகளில் காணாமல் போன 234 பேரை கண்டுபிடிக்க தனிப்படை

10 ஆண்டுகளில் காணாமல் போன 234 பேரை கண்டுபிடிக்க தனிப்படை


ADDED : ஜூலை 19, 2024 02:04 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த, 10 ஆண்டுகளில் காணாமல் போன, 234 பேரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்-ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த, 10 ஆண்டுகளில் காணாமல் போன-வர்கள், அடையாளம் தெரியாமல் இறந்து போனவர்கள் யார் என கண்டுபிடிக்க,

எஸ்.பி. அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சரவணக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் கடந்த, 10 ஆண்டுகளில், 360 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில், 126 பேர் கண்டு

பிடிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள ஆண்கள், 118 பேர், 85 பெண்கள், 31 குழந்தைகள் என மொத்தம், 234 பேரை கண்டுபி-டிக்க வேண்டி உள்ளது. அதேபோல் அடையாளம் தெரியாமல் இறந்து போனவர்கள், சாலையோரம் இறந்து போனவர்கள் என, 104 பேரின் விவரங்களையும் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இதற்காக, 6 சப்-டிவிசனில், ஒரு டிவிஷனுக்கு ஒரு எஸ்.ஐ., ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரு போலீசார் இடம் பெற்று உள்ளனர். இந்த தனிப்படையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us