sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரி நிரம்பி கோடி விழுந்த இடத்தில் உடைப்பு

/

ஏரி நிரம்பி கோடி விழுந்த இடத்தில் உடைப்பு

ஏரி நிரம்பி கோடி விழுந்த இடத்தில் உடைப்பு

ஏரி நிரம்பி கோடி விழுந்த இடத்தில் உடைப்பு


ADDED : ஆக 17, 2024 04:40 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: பெரியேரிப்பட்டி ஏரி நிரம்பி, கோடி விழுந்த இடத்தில் உடைப்பு ஏற்பட்டு, சரபங்கா ஆற்றுக்கு உபரி நீர் சென்றது.

மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து, திப்பம்பட்டி உபரி நீரேற்றும் நிலையம் மூலம், 100 ஏரி திட்டத்தில் உள்ள மானாத்தாள் ஏரி, இரண்டு வாரங்களுக்கு முன்பு நிரம்பியது. அதி-லிருந்து ஒரு பிரிவாக தொளம்சம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து துவங்கி, கடந்த, 12ல், நிரம்பி கோடி விழுந்தது. அங்கிருந்து பெரியேரிப்பட்டிக்கு நீர்வரத்து துவங்கியது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 185 ஏக்கர் பரப்பளவு

கொண்டது.

தொடர் நீர் வரத்து காரணமாக நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ஏரி நிரம்பி கோடி விழுந்தது. இதனை தொடர்ந்து, அப்-பகுதி மக்கள் ஏரியில் மலர் துாவி வணங்கினர். வெளியேறும் உபரி நீர் தாரமங்கலம் ஏரிக்கு செல்கிறது. அவ்வழியில் பல இடங்களில் துார்வாரப்படாமல் உள்ளதால், தண்ணீர் தேக்கமாகி, பெரியேரிப்பட்டி ஏரி கோடி விழுந்த இடத்தில் உடைப்பு ஏற்-பட்டு, சரபங்கா ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால், தாரமங்கலம் ஏரிக்கு நீர் விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' உடைப்பு ஏற்பட்ட இடத்தை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us