ADDED : ஜன 13, 2024 03:40 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: ஆத்துார் இளைஞர் அணி நண்பர் குழு சார்பில், தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இவர்கள், அங்குள்ள சி.எஸ்.ஐ., பள்ளி விடுதியில் படிக்கும் மாணவர்களுடன் இணைந்து, விஜயகாந்துக்கு, 100 மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, 100 பேருக்கு உணவு வழங்கினர்.
