sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாளை முதல் 25 வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

/

நாளை முதல் 25 வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

நாளை முதல் 25 வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

நாளை முதல் 25 வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்


ADDED : மார் 22, 2024 01:46 AM

Google News

ADDED : மார் 22, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்;சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி அறிக்கை:

பங்குனி உத்திரம், 4வது சனி, பவுர்ணமியை முன்னிட்டு, மார்ச், 23(நாளை) முதல், 25 வரை, சேலம் கோட்டத்தில், 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சேலம் புறநகர், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கு பஸ்கள் இயக்கப்படும்.

சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு; ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், புதுச்சேரி, கடலுார்; நாமக்கல்லில் இருந்து சென்னை; திருச்சியில் இருந்து ஓசூர்; பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு; ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தவிர பவுர்ணமியையொட்டி சேலம் புறநகர், தர்மபுரி, ஓசூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பங்குனி உத்திரத்தையொட்டி ஆத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலுக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us