/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
34 கிலோ கஞ்சா பறிமுதல்கேரள கும்பல் சிக்கியது
/
34 கிலோ கஞ்சா பறிமுதல்கேரள கும்பல் சிக்கியது
ADDED : மார் 09, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
34 கிலோ கஞ்சா பறிமுதல்கேரள கும்பல் சிக்கியது
சேலம்:சேலம் மதுவிலக்கு பிரிவு போலீசார், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று முன்தினம் ரோந்து மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் படி நின்றிருந்த, 3 பேரை பிடித்து விசாரித்ததில், கேரள மாநிலம் பாலக்காடு, வடக்கஞ்சேரியை சேர்ந்த ஜிஜித், 31, அனுராஜ், 19, ஹமீத் கபூர், 26, என தெரிந்தது.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, 34 கிலோ கஞ்சா இருந்ததோடு, கேரளா கொண்டு செல்ல முயன்றது தெரிந்தது. இதனால், 3 பேரையும் கைது செய்த போலீசார், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.