/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
162 மையங்களில் 46,000 பேர் குரூப் - 2 தேர்வு எழுத ஏற்பாடு
/
162 மையங்களில் 46,000 பேர் குரூப் - 2 தேர்வு எழுத ஏற்பாடு
162 மையங்களில் 46,000 பேர் குரூப் - 2 தேர்வு எழுத ஏற்பாடு
162 மையங்களில் 46,000 பேர் குரூப் - 2 தேர்வு எழுத ஏற்பாடு
ADDED : செப் 07, 2024 08:07 AM
சேலம்: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்து கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:
மாவட்டத்தில், 46,856 பேர், குரூப் - 2 தேர்வு எழுத உள்ளனர். சேலம், ஆத்துார், மேட்டூர், ஓமலுார், சங்ககிரி, வாழப்பாடி வட்-டங்களில், 162 மையங்களில் தேர்வு நடக்க உள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய வழிகாட்டுதல்படி வரும், 14ல் நடக்க உள்ள தேர்வு எழுத, காலை, 9:00 மணிக்குள், மையத்-துக்கு வந்துவிட வேண்டும். தேர்வை கண்காணிக்க பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
விதிமுறைக்கு ஏற்ப வினாத்தாள், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு நேரம், நுழைவு சீட்டு சரி-பார்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்-படும். தேர்வர்கள் கண்டிப்பாக நுழைவுச்சீட்டு கொண்டு வர வேண்டும். அவர்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்-கப்படுவதோடு தேர்வு மையம், வீடியோ பதிவு செய்யப்படும். மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கை-களும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.