sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அதிவேகத்தால் உயிர்களை பறித்த தனியார் பஸ் விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் நசுங்கி பலி

/

அதிவேகத்தால் உயிர்களை பறித்த தனியார் பஸ் விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் நசுங்கி பலி

அதிவேகத்தால் உயிர்களை பறித்த தனியார் பஸ் விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் நசுங்கி பலி

அதிவேகத்தால் உயிர்களை பறித்த தனியார் பஸ் விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் நசுங்கி பலி


ADDED : ஜூன் 13, 2024 02:31 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் அருகே தனியார் பஸ்சை அதிவேகமாக ஓட்டிவந்து, பைக்குகள் மீது மோதியதில் இரு குழந்தைகள் உள்பட, 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து சேலம் நோக்கி லாரி, நேற்று காலை, 10:45 மணிக்கு வந்து கொண்டிருந்தது. சேலம் அருகே வீராணம், சுக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில், சேலம் - திருப்பத்துார் நெடுஞ்சாலையில் வந்தபோது வேகத்தடை இருந்ததால், லாரி டிரைவர், 'பிரேக்' போட்டு மெதுவாக ஓட்டினார்.

அப்போது லாரிக்கு பின்புறம், 'யுனிகான்' பைக்கில், தர்மபுரி மாவட்டம் அரூர், எம்.தாதம்பட்டியை சேர்ந்த முருகன், 30, அவரது மனைவி நந்தினி, 25, அவர்களது குழந்தை கவின், 1, வந்தனர். முருகன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அளவையராக பணிபுரிந்தார்.

அதேபோல், 'பல்சர்' பைக்கில், சேலம், வீராணம் அருகே பூவனுார், போயர் தெருவை சேர்ந்த லட்சுமணன், 31, அவரது மனைவி வேதவள்ளி, 28, மகன்கள் சின்னதுரை, 6, திலீப், 4, உறவினரின், 11 மாத குழந்தை ரித்திகா ஆகியோர் வந்தனர். லட்சுமணன் தம்பதி, கோவையில் கட்டட பணி செய்து வந்தனர்.

இரு பைக்குகளை ஓட்டி வந்தவர்களும், ெஹல்மெட் அணியவில்லை; வேகத்தடையில் மெதுவாக செல்ல நிறுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கு பின்னால், ஆச்சாங்குட்டப்பட்டி - சேலம் இடையே செல்லும், 'சண்முகா' எனும் தனியார் டவுன் பஸ், மின்னல் வேகத்தில் வந்து, இரு பைக்குகள் மீதும் மோதியது.

அப்போது பஸ்சில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். ஆனால், தம்பதியர் முருகன், நந்தினி மற்றும் வேதவள்ளி ஆகியோர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்த நந்தினி, தனியார் பஸ் முன்பகுதியில் சிக்கி தொங்கிக்கொண்டிருந்த காட்சி, அங்கிருந்தவர்களை பதைபதைக்க செய்தது. மேலும் அங்கு வந்த வேதவள்ளியின் குடும்பத்தினர், கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில் இறந்த தம்பதியின் குழந்தையான கவினும், மற்றொரு குழந்தை ரித்திகாவும் உயிரிழந்தனர். வீராணம் போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். காயம் அடைந்தவர்களை, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.

காயம் அடைந்த லட்சுமணன், அவரது குழந்தைகள் சின்னதுரை, திலீப்புக்கு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும், பஸ்சில் வந்து லேசாக காயம் அடைந்த 3 - 54 வயதுடைய ஒன்பது பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி, நெரிசலை சரிசெய்தனர். தப்பி ஓடிய தனியார் பஸ் டிரைவரை பின்னர், போலீசார் கைது செய்தனர்.

புதுமண தம்பதியை பார்க்க, வேதவள்ளி குடும்பத்தினர், பூவனுாரில் இருந்து வலசையூருக்கு சென்றபோது, விபத்தில் சிக்கியதாக, போலீசின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இனியாவது நடவடிக்கை வருமா?


விபத்து குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ்சை அதன் டிரைவர், அதிவேகமாக ஓட்டிச்சென்றார். அதேபோல் தான் எப்போதும் ஊர் பகுதிகளில், தனியார் பஸ்சை டிரைவர்கள் அதி வேகமாக இயக்குகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய அவலம் தொடர்கிறது.
பள்ளி அருகே வேகத்தடை இருப்பது தெரிந்தும், வேகமாக ஓட்டியதால் தான் இந்த விபத்து நேர்ந்தது; ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இனியாவது வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாநகர போலீசார், வேகமாக செல்லும் தனியார் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற விபத்துகளை தடுக்க முடியும்.இவ்வாறு கூறினர்.



விபத்தில் முருகன், நந்தினி, கவின், வேதவள்ளி உள்ளிட்ட ஐந்து பேர் இறந்த செய்தி கேட்டு வேதனை அடைந்த முதல்வர் ஸ்டாலின், காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் உள்ளோருக்கு, சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளார். மேலும், இறந்தவரின் குடும்பத்துக்கு தலா, 2 லட்சம் ரூபாய்; பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா, 1 லட்சம்; லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாய், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us