/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வசிஷ்ட நதியில் கழிவுநீர் சோதனைக்கு எடுத்த குழு
/
வசிஷ்ட நதியில் கழிவுநீர் சோதனைக்கு எடுத்த குழு
ADDED : ஆக 09, 2024 02:25 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை, தெற்கு மலைச்சரிவில், 1,266 மீ., உயரத்தில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதி, ஆத்துார், நர-சிங்கபுரம், தலைவாசல் வழியே, 90 கி.மீ., பாய்ந்து கடலுார் மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்றில் கலக்கிறது. இந்த நதியில் அதிகளவில் கழிவுநீர் விடுவதாலும் குப்பை, கழிவு கொட்டி வரு-வதாலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, வசிஷ்ட நதி பாதுகாப்பு சங்க தலைவர் அன்பரசன், விவசாயி
கள் அமைப்பினர், கடந்த மாதம், சேலம் கலெக்டர் பிருந்தாதே-வியிடம் மனு அளித்தனர்.
அவர் உத்தரவுப்படி நேற்று, சேலம் உதவி கலெக்டர் ஆக்ரிதி-சேத்தி (பயிற்சி), மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உதய -குமார், சுற்றுச்சூழல் குழுவினர் உள்ளிட்டோர், பெத்தநாயக்கன்-பாளையம், ஆத்துார், முல்லைவாடி, மணிவிழுந்தான், தலை-வாசல் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். அந்த இடங்களில் கழிவுநீரை சோதனைக்கு எடுத்தனர். கழிவு நீர் வரும் பாதை, எந்த வகை கழிவு, சீமை கருவேல மரங்கள் பாதிப்பு குறித்து அப்-பகுதியினரிடம்
கேட்டறிந்தனர்.